Saturday, December 03, 2022

கல்லூரி நண்பர், இனியவருக்காக ஒரு பிறந்தநாளின் போது 2022 நவம்பரில் எழுதியது,

உவகை உடந்தொடர,

உறவும் நட்பும் உளம்நிரப்ப

 

நல்லருளும் நற்பேரும்

நித்தம் நினைச்சேர

நீடாயுள் நீ வாழ்க!

 

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

-அச‌ன்

Friday, October 21, 2011

இன்னும் உயர்!,..

கல்லூரி நண்பர், இனியவருக்காக ஒரு பிறந்தநாளின் போது 2010 நவம்பரில் எழுதியது

எத்த‌னை இருப்பினும்
இன்னும் ஏற்ற‌ம் பெற‌
வேண்டுமென்ற‌ வேட்கை!

முன்னெடுக்கும் முய‌ற்சிக்கெல்லாம்
முத்தாய்ப்பாய் வெற்றிக‌ள்!

தொய்வில்லாம‌ல் தொட‌ர‌ட்டும்
இ‍‍ந்த சுழற்சி!
நிரைய‌ட்டும் உன்
வாழ்வில் ம‌ல‌ர்ச்சி

‍-அச‌ன்

உயர்!,..

கல்லூரி நண்பர், இனியவருக்காக ஒரு பிறந்தநாளின் போது 2009 நவம்பரில் எழுதியது


உழைப்பினால்
உய்த
உன்னத உயர்வுகள்!

பிழையில்லாப்
பண்பட்ட
பார் புகழ்!

வரங்களாய்
வளங்களின்
தொகையறாக்கள்!

உனை
வந்தடைய
வாழ்த்துகிறேன் உதயதினத்தில்!


-அன்புடன் அசன்
களமாவூர் களம்- நம் காலப் பொக்கிஷம்!

Friday, June 06, 2008

இன்னும் ஏற்றம் பெற,..

சிங்கப்பூரில் ஒரு கவிமாலை நிகழ்வில், போட்டிக்கு தந்த தலைப்பு, அத‌ற்காக‌ நானும் எழுதிய‌ சில‌ வ‌ரிக‌ள்

இன்னும் ஏற்றம் பெற,..
-----------------------‍


விய‌ந்து பார்க்கிறேன்
சில வினாக்களோடு,...

கரும்பலகைக் கேள்வி
கடைசிவரி முடிக்குமுன்னே
கச்சிதமாய் விடையெழுதி
எண் நூற்றில்
நுனிமட்டும் குறைந்து
தொன்னூற்று ஒன்பது
தொகையாய்ப் பெற்றபோதும்
கண்ணியமான‌
கணக்குடீச்சர் வசந்தாள்
கடிந்துகொண்ட காரணமென்ன?!

ஊரே உற வாய்
உழும் நிலமெல்லாம் களமாய்,..
மொத்த உலகுமே ‍‍‍என்
குட்டிக் கிறாம மாய்
கொண்டு களித்திருந்த போது,..

கள்விக் கரையேற‌
கடுகளவும் விருப்பமின்றி
காரைக்குடிக்கு குடி பெயர்ந்ததேன்?!

போட்டிகளுக்குப் பின்
பொறியியலில் தேர்ச்சி,..

வேள்விக்களுக்குப்பின் வேலை
பெற்றபோதும் போதவில்லை!

தந்தை பெற்ற கடனுக்கு
வட்டிகட்ட வழி தேடி
விழி பிதுங்கி நின்றபோதும்
வந்ததுவும் இந்த வினா!

இந்திய தேசத்தின்
சந்ததிவிதியை மீறி
ஒற்றைப் பிள்ளையாய்
ஓவியமாய்ப் பெற்றாலும்
பற்றெல்லாம் புரம்வைத்து
புறப்படுமகனே என‌
அன்னையா
அப்படி அனுப்பியது?!

அங்கொன்றும் இங்கொன்றாய்
அள்ளித் தெளித்திருக்கிறேன்

வேண்டுமானால்,
இன்னும் நீளும்
எச்ச‌ங்க‌ளின் தொட‌ர்ச்சி,..
அத்த‌னைக்கும் அச்சாணி
இன்னும் ஏற்ற‌ம் பெற‌
வாழ்க்கையின் மிர‌ட்சி!!!

Wednesday, January 05, 2005

ஏன்டா உனக்கு?

எனக்குத் தோணுவதை
ஏதோ விகிதத்தில்
எண்ணத் துவையலாக்கி - இங்கே
ஏற்றி விடும் யதார்த்தம்.

கூடவே,..

வலைக்குள் சவாரி
வருவோர் போவோரெல்லாம்
வகையாய் நிறைந்திருக்கும்
விருந்துப் படைப்புகளை
விரும்பிச் சுவைக்கும் போது

உப்புக்குச் சப்பானியாய்
உடனிருக்கும் துவையலை
ஒப்புகேனும் தொடுவார்கள் - என்ற
ஒவ்வாத நப்பாசை.

-அசன்