Friday, June 06, 2008

இன்னும் ஏற்றம் பெற,..

சிங்கப்பூரில் ஒரு கவிமாலை நிகழ்வில், போட்டிக்கு தந்த தலைப்பு, அத‌ற்காக‌ நானும் எழுதிய‌ சில‌ வ‌ரிக‌ள்

இன்னும் ஏற்றம் பெற,..
-----------------------‍


விய‌ந்து பார்க்கிறேன்
சில வினாக்களோடு,...

கரும்பலகைக் கேள்வி
கடைசிவரி முடிக்குமுன்னே
கச்சிதமாய் விடையெழுதி
எண் நூற்றில்
நுனிமட்டும் குறைந்து
தொன்னூற்று ஒன்பது
தொகையாய்ப் பெற்றபோதும்
கண்ணியமான‌
கணக்குடீச்சர் வசந்தாள்
கடிந்துகொண்ட காரணமென்ன?!

ஊரே உற வாய்
உழும் நிலமெல்லாம் களமாய்,..
மொத்த உலகுமே ‍‍‍என்
குட்டிக் கிறாம மாய்
கொண்டு களித்திருந்த போது,..

கள்விக் கரையேற‌
கடுகளவும் விருப்பமின்றி
காரைக்குடிக்கு குடி பெயர்ந்ததேன்?!

போட்டிகளுக்குப் பின்
பொறியியலில் தேர்ச்சி,..

வேள்விக்களுக்குப்பின் வேலை
பெற்றபோதும் போதவில்லை!

தந்தை பெற்ற கடனுக்கு
வட்டிகட்ட வழி தேடி
விழி பிதுங்கி நின்றபோதும்
வந்ததுவும் இந்த வினா!

இந்திய தேசத்தின்
சந்ததிவிதியை மீறி
ஒற்றைப் பிள்ளையாய்
ஓவியமாய்ப் பெற்றாலும்
பற்றெல்லாம் புரம்வைத்து
புறப்படுமகனே என‌
அன்னையா
அப்படி அனுப்பியது?!

அங்கொன்றும் இங்கொன்றாய்
அள்ளித் தெளித்திருக்கிறேன்

வேண்டுமானால்,
இன்னும் நீளும்
எச்ச‌ங்க‌ளின் தொட‌ர்ச்சி,..
அத்த‌னைக்கும் அச்சாணி
இன்னும் ஏற்ற‌ம் பெற‌
வாழ்க்கையின் மிர‌ட்சி!!!