Wednesday, January 05, 2005

ஏன்டா உனக்கு?

எனக்குத் தோணுவதை
ஏதோ விகிதத்தில்
எண்ணத் துவையலாக்கி - இங்கே
ஏற்றி விடும் யதார்த்தம்.

கூடவே,..

வலைக்குள் சவாரி
வருவோர் போவோரெல்லாம்
வகையாய் நிறைந்திருக்கும்
விருந்துப் படைப்புகளை
விரும்பிச் சுவைக்கும் போது

உப்புக்குச் சப்பானியாய்
உடனிருக்கும் துவையலை
ஒப்புகேனும் தொடுவார்கள் - என்ற
ஒவ்வாத நப்பாசை.

-அசன்

No comments: